அரசால் தடை செய்யப்பட்ட மாத்திரையை சாப்பிட்டதால் விபரீதம்.. 5 பேர் பலி.. 100 பேருக்கு தீவிர சிகிச்சை!

ஜப்பான் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான கோபயாஷி, ஒசாகாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தடை செய்யப்பட்ட கொலஸ்ட் ஹெல்ப் மருந்து உள்ளிட்ட கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டில் சுமார் 18,000 கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த 22ஆம் தேதி இந்த மருந்துகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருப்பினும் இந்த நிறுவனம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்து வந்தது.
இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் அந்த மருந்தினை உட்கொண்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!