எடப்பாடி பழனிசாமி மனைவி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் - ரோப் கார் மூலம் மலைக்கோவில் சென்று வழிபாடு!

 
 எடப்பாடி பழனிசாமி மனைவி  எடப்பாடி பழனிசாமி மனைவி

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் நேற்று மாலை பழனிக்கு வருகை தந்தனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் வசதியைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்றனர். அங்குச் சந்நிதியில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்துகொண்ட அவர்கள், முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள போகர் சந்நிதி மற்றும் கைலாசநாதர் சந்நிதிகளுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்டனர்.

எடப்பாடி

எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினருடன் அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களும் நேற்று கோவிலுக்கு வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் பழனியில் தரிசனம் மேற்கொண்டது தொண்டர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

பழனி முருகன் முருகர்

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனிக்குச் சாதாரண பக்தர்கள் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அடிக்கடி வருகை தருவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினம் அதிமுகவின் முக்கியப் பிரதிநிதிகளின் வருகையையொட்டிப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவர்களைத் தொண்டர்கள் ஆர்வத்துடன் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.