நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் eKYC சிறப்பு முகாம்!

 
ரேஷன்

 

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரேஷன் கார்டு உறுப்பினர்களின் விவரங்களை மின்னாளுமை முறையில் விரல்ரேகை மூலம் சரிபார்க்கும் (eKYC) சிறப்பு முகாம் நாளை (29.08.2026) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த முகாம் சிறப்பாகச் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன்

இந்த முகாமைப் பயன்படுத்தி இதுவரை eKYC பதிவு செய்யாத அட்டைதாரர்கள் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டை விவரங்களைச் சரிபார்த்து இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்