அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை!

 
இபிஎஸ்


 தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில்  உட்கட்சி பிரச்சனை தீவிரமானது. இதனையடுத்து  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இபிஎஸ், ஓபிஎஸ்

இதன் அடிப்படையில்  அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்

முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!