தேர்தல் எதிரொலி... தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

மக்களவைத் தேர்தலையோட்டி தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

முதல்கட்ட தேர்தல் நடைப்பெற உள்ள தமிழகத்திலும், புதுவையிலும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

டாஸ்மாக்

இந்நிலையில், வாக்குப்பதிவு நடைப்பெறும் தினத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை தமிழகத்திலும், புதுவையிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளையும், அனைத்து மதுபான பார்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web