அரசு மருத்துவமனையில் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பலி... பெரும் பரபரப்பு!
Sep 5, 2026, 19:20 IST
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கௌசிக் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைப் பகுதியில் மின்சாரம் பாய்ந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
