ஏப்ரல் 22ம் தேதி இந்தியா வருகிறார் எலான் மஸ்க்... பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்தியா வருகிறார். இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உரையாட உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., ‘எக்ஸ்' சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான்மஸ்க், வரும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
எலான்மஸ்க்கின் இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எலான் மஸ்க்கின் நிறுவனம், ஆளில்லா டாக்ஸிகளை அறிமுகப்படுத்தும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!