திமுக ஒன்றிய செயலாளரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
Jul 27, 2021, 16:00 IST
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கடம் தாலுகா குருவிகுளம். இங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இக்கிராம மக்கள் பணியி ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நூறு நாள் திட்டத்தில் பணிபுரிபவர்களை மாற்றாதே என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இங்கு பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உமாராணி மரியம்மாள் இவர்களை மாற்றம் செய்ய வேண்டாம் என கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் இவர்களை மாற்றம் செய்ய ஆணையிட்ட திமுக ஒன்றிய செயலாளர் திரு. கடற்கரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 40 நபர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர். இவர்கள் குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
From around the
web