இந்தியாவுக்கு 354 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!

 
இந்தியாவுக்கு 354 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடைபெறும் இந்தப் போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 78 ரன்னில் சுருண்டது.

அதற்கு பிறகு முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் குவித்து மொத்தம் 345 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3 ம் நாளான இன்று 9 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால், 354 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 121 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியில் முகம்மது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி தனது 2 வது இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி 354 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்க முடியவில்லை என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

From around the web