“18 மணி நேரம் ஆச்சு... இன்னும் மீட்கல...” இபிஎஸ் ஆவேசம்!

 
இபிஎஸ்

 
 
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக  பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக   மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வ.உ.சி நகர் 9-வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.  


மண்ணில் புதைந்த அந்த வீடுகளில் மொத்தமாக குழந்தைகள் உட்பட  7 ஏழு பேர் சிக்கிக் தவித்து வருவதாக  தகவல்கள் வெளியாகிஉள்ளன. இதன்படி, தற்போது அந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன்  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனையடுத்து, விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து இபிஎஸ் வெளியிட்ட பதிவில்  “திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!