சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்...எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மோதல்!

 
eps

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கடைசியாகக் குதிரை பேரம் நடந்தது என்று குறிப்பிட்டுக் கருத்துகளைத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 2017க்குப் பிறகு நடந்தது உண்மையான ஆட்சி இல்லை என்றும் அன்றே டெல்லியில் சரண்டர் ஆகிவிட்டீர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

ஆதவ் அர்ஜுனா

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எதுவும் மாநிலத்தில் நடைமுறைக்கு வரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். உண்மையான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் அனைவரும் இப்போது தவெக கட்சியில் இணைந்திருக்கிறார்கள் எனவும் அவர் அவையில் உரையாற்றினார். இந்த அதிரடியான பேச்சால் ஆத்திரமடைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து உடனடியாக எழுந்து வந்து பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி

உறுப்பினர்களின் இந்த திடீர் செயலால் பேரவையின் மாண்பு மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெரும் கூச்சல் குழப்பமான சூழல் நிலவத் தொடங்கியது. சபாநாயகர் மற்றும் காவலர்கள் நிலைமையைச் சமாளிக்க முயன்ற போதிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து கொண்டே இருந்தனர்