ஈரோடு : பண்ணாரி மாரியம்மன் திருவிழா... நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 
சத்தியமங்கலம் ஈரோடு பண்ணாரி அம்மன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை நடைப்பெற உள்ளதை முன்னிட்டு நாளை மார்ச் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை  ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மார்ச் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Erode

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து நாளை 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. 

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

உள்ளூர் மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web