பாகிஸ்தான் அமைதி குழு அலுவலகத்தில் வெடிவிபத்து… 7 பேர் பலி… 16 பேர் படுகாயம்! !

பாகிஸ்தானில் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்ட தலைநகரான வானா பகுதியில் இன்று ஏப்ரல் 29ம் தேதி திங்கட்கிழமை சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் பலி, 16 பேர் படுகாயம் அடைந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் வெடிவிபத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்ததால், அமைதி குழு அலுவலகக் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்தது. பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்பு குழுவினரும் உள்ளூர்வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில்16 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுடன் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடிவிபத்திற்குப் பின்னால் காரணம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்குப் பொறுப்பு ஏற்கவில்லை . தற்போது போலீசும் பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவ இடத்தை சீல் வைத்து, சாட்சியங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!