நடிகை ஸ்பந்தனா மாரடைப்பால் திடீர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
நடிகை ஸ்பந்தனா

கன்னட திரையுலக ஜாம்பவானாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த  கன்னட  சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார், உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உறவினரான  நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென மாரடைப்பால் காலமானார். இதனால் கன்னட திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.  'மாஸ் லீடன்', 'ஜானி', 'லால்குடி டேஸ்'  படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

நடிகை ஸ்பந்தனா

நடிகர் விஜய் ராகவேந்திராவின்   மனைவி ஸ்பந்தனா. இவர்  குடும்பத்தினருடன் தாய்லாந்து சுற்றுலா சென்றிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் பரிதாபமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தாய்லாந்தில் குடும்பத்துடன் இருந்த போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலேயே  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.  அவரது உடல் நாளை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது.   விஜய் ராகவேந்திராவுக்கும் ஸ்பந்தனாவுக்கும்  ஆகஸ்ட் 26, 2007ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய 16வது திருமண நாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட இருந்த நிலையில் மனைவியின் திடீர் மறைவால் நடிகர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

rip
 ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் பி.கே. சிவராமின் மகள் ஸ்பந்தனா துளு வம்சாவளியில் வந்தவர். இவர்களுடைய மகன்  சௌர்யா. 2016ல்   ஸ்பந்தனா 'அபூர்வா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.ஸ்பந்தனாவின் தந்தை பி.கே.சிவராம், மகளின் மரண செய்தி கேட்டு,அலறி துடித்து  உடனடியாக தாய்லாந்து விரைந்துள்ளார்.  நடிகர் விஜய் ராகவேந்திரா, தனது அடுத்த படத்தின் புரோமோஷன் வேலைகளுக்காக  பெங்களூருவில் தங்கியிருந்த நிலையில் மனைவியின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் படப்பிப்பிடிப்பு, புரோமோஷன் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.   நடிகர் புனித் ராஜ்குமாரும் மாரடைப்பால் காலமான நிலையில், அவரது குடும்பத்தில் மற்றொருவரும் மாரடைப்பால் காலமானது குடும்பத்தினரை  ரசிகர்களையும அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web