பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி திடீர் கைது!! வைரலாகும் அண்ணாமலை கண்டன ட்வீட்!!

 
பத்ரி சேஷாத்ரி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் பெரும் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகத் திறமையாளர். சேஷாத்ரி  நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மணிப்பூர் வன்முறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  இந்நிலையில், எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி இன்று காலை மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


 

இந்த கைது குறித்து  முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது,  மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல் , பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சேஷாத்ரி

இது குறித்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இந்த கைதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது. இதனை  நேரடியாக எதிர்கொண்டு தீர்வு காண்பதை விட்டு  கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது.   ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான்  போலீஸாரின் பணியா?" என சர்ச்சை  கேள்வி  ஒன்றை எழுப்பியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web