ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை!

 
ராஜ்புத்.

பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான மல்லிகா ராஜ்புத் எனும் விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மல்லிகா ராஜ்புத் உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாடகி மல்லிகா ராஜ்புத்.

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பிரபல பின்னணி பாடகியான இவர் வீட்டில் அவரது அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.

இதைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இது குறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக பாடகியின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாடகி மல்லிகா ராஜ்புத்.

கதக் நடனக்கலைஞரான மல்லிகா ராஷ்புத், எழுத்தாளரும் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டில், கங்கனா ரனாவத் நடித்த 'ரிவால்வர் ராணி' படத்தில் துணை வேடத்தில் மல்லிகா நடித்து பிரபலமானார். அதன் பிறகு பாடகர் ஷானின் ' யாரா துஜே' பாடலின் இசை வீடியோவிலும் அவர் தோன்றினார். மல்லிகா ராஜ்புத் நடிப்பு, பாடலைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

அவர் 2016-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறினார். பிறகு ஆன்மிகத்தை நோக்கி நகர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய சவர்ண சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web