ரசிகர்கள் அதிர்ச்சி... ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்காத ரோகித் ஷர்மா!

 
ரசிகர்கள் அதிர்ச்சி... ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்காத ரோகித் ஷர்மா! 

ஐபிஎல் போட்டிக்கான மும்பை இண்டியன்ஸ் தொடங்கிய பயிற்சி முகாமில் ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை. 


வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின் 17-வது சீசனின்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆர் சி பி அணியும் பலபரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து அணிகளும் தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி தனது பயிற்சியை தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

ரசிகர்கள் அதிர்ச்சி... ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்காத ரோகித் ஷர்மா! 

குறிப்பாக நட்சத்திர வீரர்களாக கருத்தப்படும் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் பயிற்சி முகாமுக்கு வராதது அந்த அணி நிர்வாகத்தை அச்சமடையச்செய்துள்ளது. இதேபோன்று சூரிய குமார் யாதவும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூர்ய குமார் யாதவ் உடல் தகுதியை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பை அணியில் இருந்த முக்கிய வீரர்களே பயிற்சிக்கு வராததால் அந்த அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

From around the web