அதிர்ச்சி... தேர்வுக்குப் படிக்காத 17 வயது மகளை அடித்தே கொன்ற தந்தை!

 
மாணவி

ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில், பள்ளித் தேர்வுக்கு சரியாகப் படிக்காததால் 17 வயதுடைய  11ம் வகுப்பு படித்து வரும் மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பிரேம் நகரை சேர்ந்த ஃபதே முஹம்மது (44) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாணவி
மகள் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் ஆத்திரமடைந்த ஃபதே மகளைக் கண்டித்தும், கட்டையால் கொடூரமாக தாக்கியும் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர், 11ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாய்மாமா போலீசில் புகார் செய்தார். புகார் குறித்து நேரில் விரைந்த போலீசார், ஃபதேவை கைது செய்தனர். 

ஆம்புலன்ஸ்
தனது மகளை அடிப்பதற்கு பயன்படுத்திய கட்டையைப் போலீசார் மீட்டுள்ளனர். ஆக்ரோஷமாக அடித்ததால் ஏற்பட்ட உள் ரத்தக் கசிவு மாணவியின் மரணத்துக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web