சொத்தை பிரித்து தராத தந்தை.. ஆத்திரத்தில் சிலிண்டரை எடுத்து ஒரே போடு.. மகன் வெறிச்செயல்!

 
ஜார்ஜ் புஷ்

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பாபாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மதுசூதனன் (64). கூலித் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், மகள்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுசூதனன் மகன் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தந்தையுடன் சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே சண்டை முற்றியதும், ஜார்ஜ் புஷ் சமையலறையில் இருந்த சிலிண்டரை எடுத்து தந்தையை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மதுசூதனன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் ஆத்திரத்தில் ஜார்ஜ் புஷ்ஷை தாக்கினர்.

இதையடுத்து அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மதுசூதனன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web