எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் உயர்வு... நேபாள அரசு திடீர் அறிவிப்பு!

உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்று எவரெஸ்ட்.இந்த சிகரம் 8,848.86 மீட்டர் உயரம் கொண்டது. பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் எவரெஸ்ட் மலை உச்சிக்கு சென்று சாதனை படைத்துள்ளனர். இதில் ஏறுவதற்காக நேபாள அரசு ராயல்டி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த ராயல்டி கட்டணம் கடந்த 2015ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது 36 சதவீத கட்டண உயர்வு ஆகும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த புதிய கட்டண உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டின் சுற்றுலா வாரியத்தின் இயக்குனர் ஆரத்தி நியூபேன் தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!