பெரும் சோகம்.... தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து நாசம், ஒருவர் பலி!

 
தீவிபத்து
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் சவானி கிராமத்தில் மோரி பகுதியில் ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த  தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீவிபத்து

போராடி   தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆனாலும்  8 முதல் 10 வீடுகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கோர தீவிபத்தில்  25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதில் சவானி கிராமத்தைச் சேர்ந்த பிரம்மா தேவி என்ற 75 வயது மூதாட்டி ஒருவரும் தீயில் கருகி பலியானார்.

உத்தரகாசி

தீ விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து மாவட்ட அதிகாரிகள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இன்று  ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை காலை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், தற்காலிக தங்குமிடங்கள் என  நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web