மருத்துவமனையில் திடீர் தீவிபத்து!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த நோயாளிகள்!!
தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதே சமயத்தில் தீ விபத்து ஏற்பட்ட அறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளைப் பத்திரமாக வேறு அறைக்கு மாற்றிவரும் பணியும் நடைபெற்று வருகின்றன. மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அங்கிருந்து வரும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?