அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்!

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் டி.ஜி.ஐ., பேக்கிங் என்ற பெயரில் அட்டை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அட்டைகள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில், உற்பத்தி செய்யப்பட்ட அட்டைகளை சேமித்து வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. சில மணி நேரத்தில், குடோன் தொழிற்சாலை உட்பட பல பகுதிகளுக்கு அடுத்தடுத்து தீ பரவியது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இங்குவந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள், தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர போராட்டம் நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள், இயந்திரங்கள் தீயில் கருகி சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!