விசாகப்பட்டினம் இரும்பாலையில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் பலி!

 
விசாகப்பட்டினம் இரும்பாலையில் தீ விபத்து: விசாகப்பட்டினம் இரும்பாலையில் தீ விபத்து:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலையில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் முக்கியப் பிரிவில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நேரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலையில் அதிக வெப்பத்தில் உருக்கப்பட்ட திரவ இரும்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்றபோது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கொதிக்கும் இரும்பு குழம்பு நாலாபுறமும் சிதறி விபத்துக்குள்ளானதில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகினர்.

இந்தக் கொடூர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.