ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. கதறும் ஓனர்..!
ராசிபுரம் அருகே நள்ளிரவில் மின் கசிவு காரணத்தினால் உணவகத்தில் தீ விபத்து. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் சரவணன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு உணவகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சரவணனுக்கு நள்ளிரவு 2 மணி அளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது.
இதனையடுத்து சரவணன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடையில் உள்ள இருந்த டிவி, பொருட்கள்,பணம் உள்ளிட்ட 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமான என வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!