பெண் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு கதறல்... பகீர் வீடியோ!

 
தீ தீ

மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியில் வசித்து வந்த வள்ளி என்ற 45 வயது பெண், இன்று ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் வறுமையின் கொடுமை தாளாமல் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இவர் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மிகவும் சிரமப்பட்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கடுமையான சூழ்நிலையில் மனமுடைந்த வள்ளி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் தனது உடலில் நெருப்பு வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயங்களுடன் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

90 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில் இருந்த அந்தப் பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் தற்கொலைச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் விவரிக்க முடியாத பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.