அதிர்ச்சி வீடியோ!! ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு!! 4 பேர் பலி!!

 
ரயில்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை நோக்கி ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் பஹல்கர் மாவட்ட ரயில் நிலையம் அருகே ரயில் வந்தது. அப்போது, ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்) வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர் மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.ஓடும் ரயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆனால் தொடர்ந்து அந்த வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்.பி.எப். வீரர், 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எப் வீரர் டஹிசர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது அதில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார்.


 

இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், போலீசார் தப்பியோடிய வீரரை தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்தனர். அந்த வீரரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரயில்

 மேற்கு ரயில்வே சார்பில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும் ஆர்.பி.எப். காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆர்.பி.எப். ஏ.எஸ்.ஐ. மற்றும் மூன்று பயணிகளை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்தார். குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் அவரது ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கையில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏஎஸ்ஐ உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என  தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் பயணிகள் மீது ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web