புற்றுநோயில் இருந்து விடுபட்ட முதல் குழந்தை.. சி.ஏ.ஆர்.டி சிகிச்சை மூலம் மறு வாழ்வு பெற்ற இந்திய வம்சாவளி சிறுவன்!

 
யுவன் தாக்கர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவன் தாக்கர் என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இங்கிலாந்தில் சி.ஏ.ஆர்.டி சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்துள்ளார். இங்கிலாந்தில் இந்த சிகிச்சையின் மூலம் புற்றுநோயில் இருந்து குணமடைந்த முதல் குழந்தை இவர்தான். இங்கிலாந்தின் லண்டன் அருகே உள்ள வாட்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்தவர் யுவன் தாக்கர் (16). அவருக்கு 6 வயதாக இருந்தபோது லுகேமியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கு கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் முழுமையாக குணமடையவில்லை. இறுதியாக, சி.ஏ.ஆர்.டி கைமேரா சிகிச்சையைப் பயன்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர், இது உடலின் நோயெதிர்ப்பு செல்களை மரபணு ரீதியாக மாற்றுகிறது மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க பயன்படுத்துகிறது.

இந்த சிகிச்சையில், ஆய்வகத்தில் மரபணு மாற்றப்பட்ட T செல்கள் நோயாளியின் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. இந்த நவீன சிகிச்சை யுவனுக்கு 11 வயதாக இருந்தபோது 2019 இல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் தாக்கர் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இங்கிலாந்தில் சி.ஏ.ஆர்.டி கைம்ரியா தெரபி மூலம் குணமடைந்த முதல் குழந்தை யுவன் தாக்கர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web