இன்று கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

 
பொறியியல் கல்லூரி
 


 
தமிழகத்தில் கலை, அறிவியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.மாணவ மாணவிகள் பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன்  வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  முதலாமாண்டு மாணவர்களுக்கு பூக்களை பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.  முன்னதாக, பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பிறகு  கலை அறிவியில் கல்லூரிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை திறக்கப்பட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெற்றது.  ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்ட பிறகு திங்கட்கிழமை ஜூன் 16ம் தேதி கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும்  183 அரசுக் கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 1,299 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என 1,643 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சமீபத்தில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கைகள் நடைபெற்று முடிந்துள்ளன.

மாணவிகள்

இவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்த  நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் இன்று தொடங்கியிருக்கின்றன. சில தனியாா் மற்றும் அரசு உதவிபெரும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளும்  தொடங்கிவிட்டன.