கார் மோதி 5 மாணவர்கள் படுகாயம்... பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது பெரும் சோகம்!

 
கார் மோதி 5 மாணவர்கள் படுகாயம்

சீனாவில் ஜெஜியாங் மாகாணத்தில் ஜின்ஹுவா நகரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து  வருகின்றனர். இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை மாணவ-மாணவியர் பேருந்துக்காக  காத்திருந்தனர். 

அப்போது சாலையில் வேகமாக வந்த கார், பேருந்துக்கு  காத்திருந்த மாணவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்துள்ளனர்.  
படுகாயம் அடைந்த 5 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web