அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து... 5 விளையாட்டு வீரர்கள் உடல் நசுங்கி பலி!

 
america america

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று நிகழ்ந்த கோரமான விமான விபத்தில், சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமரில்லோ கிளப்பைச் சேர்ந்த புகழ்பெற்ற 'பிக்கிள்பால்' விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில் நடைபெறவிருந்த முக்கிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்பதற்காக உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றபோது, விம்போர்லி அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தச் சிறிய ரக விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோதே திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. விமானியின் கட்டுப்பாட்டை மீறித் தறிக்கெட்டுப் பறந்த விமானம், அடுத்த சில நிமிடங்களில் குடியிருப்பு இல்லாத வெற்று நிலப்பரப்பில் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே கிளப்பைச் சேர்ந்த 5 திறமையான வீரர்கள் மறைந்த செய்தி விளையாட்டு உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.