விமான நிலையத்தில் விபரீதம்... ஓடு பாதையில் சென்ற நபர் விமான எஞ்சினில் சிக்கி பீஸ், பீஸாக சிதறி பலி... பகீர் வீடியோ!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், விமான எஞ்சினில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த நபர் எஞ்சின் பகுதிக்கு அருகில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர், அந்த நபரைக் காப்பாற்ற முயன்றாலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
New footage captures a Frontier Airlines plane hitting a trespasser while taking off from Denver International Airport in Colorado. pic.twitter.com/d2ckCOqHXo
— aircraftmaintenancengineer (@airmainengineer) May 11, 2026
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அந்த நபர் எதற்காக எஞ்சின் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். பயணிகள் யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை என விமான நிலைய நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தினால் சில மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று விமான போக்குவரத்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய ஓடுபாதையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் விமான நிலைய ஊழியரா அல்லது பயணிகளா என்பது குறித்த மேலதிக தகவல்களைச் சேகரித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து குறித்த செய்திகள், விமானப் பயணிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
