பயணிகள் அதிர்ச்சி... ரயிலில் பாண்ட்ரி கார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது!

 
ரயில்

இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வரும் நெடுந்தூர ரயில்களில் பயணிகளின்  வசதிக்காக பான்ட்ரி உணவு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாண்ட்ரிகளில் தயாராகும்   உணவு வகைகள் ரயிலில் பயணம் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை மாற்றி அமைத்து தற்போது புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.  புதிய விதிமுறைகளின் படி ரயில்களில் உள்ள பான்ட்ரிகார் பெட்டிகளில் இனி பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில்பேண்ட்ரி

இவைகளில் இனி தண்ணீர் சூடேற்றி கொள்வது அல்லது தேநீர் மட்டுமே தயாரிக்கப்படும்.   ரயில் நிலையங்களில் உள்ள சமையல் அறைகளும் மூடப்படும்   இந்த உத்தரவை வருகிற ஜூலை மாதம் முதல் ரயில்களில் அமல்படுத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.  புதிய முறையின் கீழ் எந்தவொரு வழித்தடத்தின் ரயில்களிலும் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சமையல் வேலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்வேறு ஏஜென்சிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

ரயில்

ஒரே வழித்தடத்தில் ஐந்து முதல் ஏழு ரயில்களுக்கு அந்தந்த ஏஜென்சிகள் பொறுப்பாக இருக்கும் வகையில் இவை செயல்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையைத் தொடங்கி  அங்கிருந்து ரயில்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை சப்ளை செய்யும். இதன் முதல் கட்டமாக  வடகிழக்கு ரயில்வே 80 பேண்ட்ரி கார்களை ஒரு கிளஸ்டராக பராமரிக்கும் சேவையைத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தேதி வரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதன் வரவேற்பை பொறுத்து  படிப்படியாக விரிவு படுத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.  

From around the web