சென்னையில் 2வது நாளாக எஸ்.டி. கூரியர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Updated: Mar 15, 2024, 11:48 IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் சகோதரருக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பம்மல் ‘மார்ஸ்' ஓட்டல் உரிமையாளர்களில் ஒருவரான ரியாஸ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் இன்று 2ம் நாளாக அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!
From around the
web