முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!

 
நரேஷ்குப்தா


தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ்  காலமானார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்து  பெரும் வரவேற்பை பெற்றவர். தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது  மறைவிற்குமுன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐஏஎஸ், காலமானதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கலை தெரிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  ''நரேஷ் குப்தா ஒரு நல்ல அதிகாரியாக திகழ்ந்தார். அவர் என்னையும் நம்மில் பெரும்பாலோரையும் கவர்ந்தவர். அவரது எளிமை மற்றும் பணிவு மூலம் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.

நரேஷ் குப்தா

நாம் ஒரு மிகச் சிறந்த நபரை இழந்துள்ளோம். அவர் மிகவும் எளிமையான மற்றும் நேர்மையான அதிகாரி. தலைமைச் செயலக ஊழியர்களை திகைக்க வைக்கும் வகையில் பணிபுரிந்தாலும் எளிமையின் சிகரமாக ஆட்டோவில் பயணித்து செல்வார். மென்மையாகப் பேசினாலும், வாக்குப்பதிவு நடத்துவதில் அவர் ஒரு கடினமான மாஸ்டராக வலம் வந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

From around the web