முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்!

 
 நட்வர் சிங்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த இரண்டு வாரங்களாக வயது மூப்பு காரணமாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் நட்வர் சிங் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நட்வர் சிங் காலமானார். நட்வர் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது இரங்கலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், 2001-05 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக நட்வர் சிங் பணியாற்றினார். பாகிஸ்தானுக்கான தூதராக பணியாற்றிய நட்வர் சிங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்தில் 1966 முதல் 1971 வரை பணிபுரிந்தார்.நட்வர் சிங்கிற்கு 1984ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா