ராஜினாமாவுக்கு எதிரான வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

 
“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரது ராஜினாமாவைச் சட்டமன்ற சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, அதிமுகவின் தலைமை கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சி.விஜயபாஸ்கர்

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரிடமும் இந்த ராஜினாமா குறித்து விளக்கம் கேட்டு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அவர்களுடன் சேர்த்து இந்த விவகாரத்தில் சட்டமன்றச் செயலாளரும் தகுந்த பதிலளிக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

விஜயபாஸ்கர்

இருதரப்பு வாதங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட முக்கிய விசாரணையை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதிமுகவின் இரண்டு முக்கிய முன்னாள் அமைச்சர்களின் ராஜினாமாவை எதிர்த்துக் கட்சித் தலைமையே நீதிமன்றம் சென்றுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.