முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் , நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாரும் ஆவார். அவருக்கு வயது 73. பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள், உறவினர்கள் , நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.
அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!