டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி!

 
ரஞ்சிகோப்பை

 

சேலத்தில் முதன்முறையாக நடக்க உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ரஞ்சிகோப்பை

கடந்த பிப்ரவரி 9ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற போட்டி 'டிரா'வில் முடிந்த நிலையில் தமிழக அணியின் அடுத்த போட்டி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைப்பெற உள்ளது. 

ரஞ்சிகோப்பை
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில், நாளை மறுதினம் பிப்ரவரி 16ம் தேதி முதல், 19ம் தேதி வரையில் நடைப்பெற உள்ள இந்த போட்டியைக் காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் தமிழக கிரிக்கெட் அணி மோதுகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் முதன்முறையாக சேலத்தில் நடைப்பெற உள்ளதால், பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web