நாளை ஐபிஎல் மேட்ச் பார்க்க இலவச பேருந்து ... கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

 
பேருந்து

 நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமை   சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.  தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன.  இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் தொடங்கிய  5 நிமிடத்திற்குள்ளேயே விற்றுத் தீர்ந்தது. 

ஐபிஎல் 2024


இந்நிலையில்,  ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என  தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
 போட்டியை காணவருபவர்களின் வசதிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி, முன்பதிவு செய்துள்ளது. இதனால்  கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்


இதனை பயன்படுத்த விரும்புபவர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான  Online / pre printed டிக்கெட்டை காட்டினாலே போதுமானது.  .
நடத்துனர் அதனை சரிபார்த்த பின்னர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பார்.  இந்த சலுகை போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே  
குளிர் சாதன பேருந்துகளில் இந்த வசதி செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web