பக்தர்கள் சோகம்... இலவச தரிசன டோக்கன் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி...!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

உலக பிரசித்தி பெற்ற வைணவ ஆலயம் திருப்பதி. திவ்யதேசங்களின் ஒன்றான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்வர். விழாக்காலங்களில் லட்சங்களை தொடும் . திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். நாள்தோறும் பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tirupati

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஆன நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் 48 மணி நேரம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையான தரிசிக்கும் நிலை ஏற்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நாட்களில் இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்களையும், டோக்கன்கள் வாங்காத பக்தர்களையும் கோயிலுக்குள் அனுப்பி கையாளுவதில் இரண்டு வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நிர்வாக ரீதியான சிரமங்களை தேவஸ்தான நிர்வாகம் எதிர்கொள்ள நேர்கிறது.

Tirupati

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் இம்மாதத்தில் 7, 8, 14 ,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது.

From around the web