ரேசன் கடைகளில் தீபாவளிக்கு இலவசம்! அரசு அதிரடி அறிவிப்பு!
Oct 26, 2021, 10:15 IST
இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக தரப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகள் கூடுதல் நேரங்கள் செயல்பட்டு மக்களுக்கு இத்திட்டத்தை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
From around the
web