77வது சுதந்திர தினத்தில் தியாகியின் மனைவி உண்ணாவிரதம்!!

 
பார்வதி

இன்று  ஆகஸ்ட் 15ம் தேதி  இந்தியா முழுவதும்  77வது சுதந்திரதின விழாவை கோலாலகலமாக கொண்டாடி வருகின்றோம். இந்நிலையில்  இந்த சுதந்திரதினத்தில்  உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி அறிவித்துள்ளார்.  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் வசித்து வந்தவர்  சுதந்திரப் போராட்டத் தியாகி வடிவேல். இவரும், இவரது  மனைவி பார்வதியும்  பென்னாகரம் பகுதியில் வசித்து வந்தனர். அப்பொழுது இவர்களது விவசாய நிலத்தினை அரசு தேவைக்காக அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அதற்கு  இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டது.  இந்த   தொகையினை வங்கியில் டெபாசிட் செய்து, அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தைப் பெற்று குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

பார்வதி

இந்நிலையில் தியாகி வடிவேலின் தங்கை மகன் பி.கே.பவுன்ராஜ்   2016ல்  தொழில் செய்வதற்காக தனது உதவியாளர் ரமேஷ்   மூலம்  ரூ67 லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளார்.
இந்த பணத்திற்கு  வங்கி தரும் வட்டிப்பணத்தை காட்டிலும் அதிக வட்டி தருவதாக பவுன்ராஜ் கூறியதை கேட்டு அவருக்கு பணத்தை வழங்கிவிட்டனர். ஆனால் சொன்னது போல் பவுன்ராஜ் வட்டித்தொகை தரவில்லை. அதே நேரத்தில்  2017ல்  தியாகி வடிவேல் உயிரிழந்து விட்டார். அதன்பிறகும் பவுன்ராஜ் பணத்தைக் கொடுக்கவில்லை.   கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வதி, பவுன்ராஜை வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  2022 ஜூலையில்  ரூ10 லட்சத்திற்கான   காசோலையை கொடுத்துள்ளார். மீதிப்பணம் இன்னமும் வந்து  சேராத நிலையில்  பவுன்ராஜ், பார்வதியைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.  

பார்வதி

இது குறித்து    பார்வதி கடந்த மாதம் தொப்பூருக்கு வந்த தமிழக முதல்வரிடம்   நேரில் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெறவில்லை.  சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பத்திற்கே, இந்நிலை இருப்பதால் சுதந்திர தினத்தில் தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.உடனடியாக தனது பணத்தை ஏமாற்றிய பி.கே.பவுன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன்  தனக்கும் தங்கள்  குடும்பத்தார் உயிருக்கும் ஆபத்து இருப்பதால்   உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர்  கோரிக்கை விடுத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று சுதந்திரதினத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக  மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web