இன்று முதல்…!! 50,000 இடங்களில் சிறப்பு முகாம்!! வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் பணி!! சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!!
Nov 16, 2021, 05:45 IST
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களிடையே கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வீடு வீடாக செலுத்தும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் “தமிழகம் முழுவதும் நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 9ம் கட்ட தடுப்பூசி முகாம் நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் நடைபெறும். தமிழகத்தில் இதுவரை 73 சதவீத மக்களுக்கு முதல் தவணையும், 35 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்
From around the
web