காதலனுடன் பைக் ரைடு சென்ற போது இளம்பெண் 10 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்!!

 
பாலியல் வன்கொடுமை

டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்  26 வயது  பழங்குடியின இளம்பெண் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் வந்தார். சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் பாகூரில்  படேர்கோலா கிராமத்தில் உள்ள தனது காதலனுடன் இளம்பெண் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது படேர்கோலா உயர் நிலைப்பள்ளி மைதானம் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தியது.

பாலியல்


பின்னர், அவரது காதலனை அந்த கும்பல் கடுமையாக தாக்கி விட்டு இளம்பெண்ணை தூக்கி சென்று மாறி மாறி கதற கதற பலாத்காரம் செய்தனர். இதனால் இளம்பெண் சுயநினைவு இழந்தார். இளம்பெண் உயிரிழந்து விட்டதாக நினைத்து அந்த கும்பல் அவரை விட்டு விட்டுச் சென்றது.  மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கதறியபடி தெரிவித்துள்ளார். இச்சம்பவம்  குறித்து   போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இளம்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சிறப்பு புலனாய்வுக்குழு அஜித்குமார் தலைமையில் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

பாலியல் தொல்லை

இந்திய தண்டனைச் சட்டம்   376 டி பிரிவின் கீழ் 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தத சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி முனையில் 10 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட்டில் இதுபோல கூட்டுப் பலாத்காரச் செயல் நடப்பது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள விமான நிலையப்பகுதியில் தனது ஆண் நண்பருடன் இருந்த பெண் தொழில்நுட்பக் கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web