அதிர்ச்சி... கஞ்சா போதையில் இளம்பெண் பலாத்காரம்.. அமைச்சர் உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகி உட்பட 4 பேர் கைது?!
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கஞ்சா போதை ஆசாமிகளால் மிரட்டி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கைதானவர்களில் ஒருவர் அமைச்சர் உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகி என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவது குறித்து அ.ம.மு.க. தலைவர் டிடிவி திமுக அரசின் மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகத்தில் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக ஊருக்கு வந்தார்.

கடந்த 12ம் தேதி இளம்பெண் வீட்டில் தனியே இருந்த நிலையில், தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25) இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். அவருடன் வர மறுத்த இளம்பெண்ணை வலுகட்டாயமாக, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர்(26), பிரவீன் (20,) 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர்.
இதை பார்த்த இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாதக்காரம் செய்தும் அதை மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
பிறகு, 12ம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் அளித்தார். போலீசார் நேற்றுமுன்தினம் கவிதாசன், திவாகர்,பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ் ஆகியோர் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கவிதாசன் மீது கடந்த 2020ம் ஆண்டு விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இதை போல பிரவீன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சிறுவரை, சிறார் சீர்த்திருத்த பள்ளியிலும், மீதம் முன்று நபர்களையும் நீதிமன்ற காவிலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இவ்வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளம்பெண் பலாத்காரம் வழக்கில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை 60 நாட்களில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும். முக்கிய குற்றவாளிக்கு குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பின்னனியில் உள்ளார்களாக என விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.
இதில் கவிதாசன் என்பவர் அமைச்சர் உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகி என்று கூறப்படுவது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
