ஓரினச்சேர்க்கை திருமணம்.. சட்டம் அமலுக்கு வந்த நாளில் திருமணம் செய்து கொண்ட 100க்கும் மேற்பட்ட ஜோடிகள்!

 
ஓரினச்சேர்க்கை திருமணம்

கடந்த ஆண்டு தாய்லாந்து அரசு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் நேற்று (ஜனவரி 23) அமலுக்கு வந்தது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம், தாய் செனட் ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதா மன்னர் மகா வஜிரலோங்கோர்னுக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர், ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்றுக்கொண்ட மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து. தைவானும் நேபாளமும் ஏற்கனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்துள்ளன. இது தொடர்பாக, தாய்லாந்தில் நேற்று ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, தலைநகர் பாங்காக்கில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, பிரதமர் படுகோன் ஷினாவத்ரா கூறுகையில், பாலினம், இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவரையும் அரவணைக்கிறது. "அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஓரினச்சேர்க்கை தம்பதிகள் இப்போது திருமணம் செய்து கொள்ளவும், தங்கள் சொத்தைப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web