அதிர்ச்சி!! ரயில் நிலையத்தில் இளம்பெண் வெட்டிக் கொலை!! அச்சத்தில் ரயில் பயணிகள்!!

 
சைதாப்பேட்டை

சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருபவர் ராஜி. இவருக்கு வயது 35. இவர்   மின்சார ரயிலில் பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.  நேற்றும் வழக்கம் போல்  இரவு சுமார் 8 மணிக்கு   ராஜேஸ்வரி எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் சமோசா விற்பனை செய்து கொண்டிருந்தார்.  
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி இறங்கிய போது அதே ரயிலில் பயணம் செய்து வந்த மற்றொரு நபர் ரயிலில் இருந்து இறங்கி ராஜஸ்வரியை சராமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அதே ரயிலில் தப்பித்து ஓடிவிட்டார்  

கத்திக்குத்து


ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு ராஜேஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி  வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ஒரு மணி அளவில் உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்
இச்சம்பவம் குறித்து   ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு 3 கணவர்கள் உள்ளதாகவும், எனவே குடும்ப பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என  முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இச்சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web