காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா... தாலி கட்டிவிட்டு எஸ்கேப்பானதால் விபரீதம்!

 
ரேவதி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தன்னைக் காதலித்து விட்டு, தாலிகட்டி திருமணம் செய்துக் கொண்ட பின்னர் ஏமாற்றியதால், காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி காதலனின் வீட்டின் முன்பு பொறியியல் பட்டதாரி மாணவியான ரேவதி எனும் இளம்பெண் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. குண்டூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரேவதி, அதே கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த படியே  இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கல்லூரியில் எம்பிஏ பட்டதாரியான திருவெறும்பூர் கணேசபுரத்தை சேர்ந்த பாபுராஜ் என்பவரை ரேவதி காதலித்து வந்துள்ளார்.

ரேவதி

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் பொன்மலையில் உள்ள கோவிலில் ரேவதியும், பாபுராஜூம் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர்.

இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் பாபுராஜின் பெற்றோர் மகனை ஏற்க மறுத்து விட்டு, இனி அவர்களது திருமண வாழ்க்கையில் எந்த தலையீடும் செய்யமாட்டோம் என்று எழுதி கொடுத்து விட்டு சென்றதாகவும், அதே போல் ரேவதி பெற்றோர் இவர்களை ஏற்று கொண்டதாவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் போனில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்ததாகவும், நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறிவிட்டு செல்போனை ஸ்விட் ஆப் செய்ததாக ரேவதி புகார் தெரிவித்துள்ளார். 

ரேவதி

தொடர்ந்து அதன் பின்னர் பாபுராஜைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை வரவழைத்து விசாரணை நடத்தி, தாலி கட்டி விட்டு இளம்பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கின் அடிப்படையில் பாபுராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து பாபுராஜின் பெற்றோர், பாபுராஜைப் பிணையில் எடுத்துள்ளனர். இதையறிந்த ரேவதி கணவன் பாபுராஜ் வீட்டிற்கு சென்று, தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கேட்டுகொண்டார். சிறைக்கு அனுப்பியதால் ரேவதியை தான் விவகாரத்து செய்ய போவதாக பாபுராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பாபுராஜ் வீட்டு முன் தனது தர்ணா போராட்டத்தை துவங்கினார் ரேவதி. இது குறித்து, தகவல் அறிந்து அங்கு சென்ற திருவெறும்பூர் போலீசாரும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் ரேவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் சமாதானத்தையடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு தனது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார் ரேவதி. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web