பாண்டிச்சேரியில் சிறுமி கொலை வழக்கு... சவுதி அரேபியா போல தண்டனை தரணும்.. பிரபல நடிகர் ஆவேசம்!

 
நிழல்கள் ரவி

பாண்டிச்சேரி சிறுமி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சவுதி அரேபியாவில் கொடுக்கப்படுவதைப் போல தண்டனைத் தர வேண்டும் என நடிகர் நிழல்கள் ரவி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

நிழல்கள் ரவி

இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் நிழல்கள் ரவி,  “2024 இல் வந்த முதல் வெற்றி படமான வடக்குப்பட்டி ராமசாமி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது, அதில் நல்ல  பாத்திரத்தில் நடித்துள்ளேன் மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளார்கள். தொடர்ந்து ஐந்து படங்கள் நடித்து வருகிறேன்   இப்பொழுது படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்வதற்காக வந்துள்ளேன்,பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்பதை விட கதை தான் முக்கியம் திரைக்கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக படங்கள் வெற்றி அடையும்” என்றார்.

நிழல்கள் ரவி
பாண்டிச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, “இந்த கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும். அப்படி தண்டனைத் தந்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள்” என தெரிவித்தார்..

From around the web